ஜெயலலிதா உயர் சிகிச்சை பெற சிங்கப்பூர் செல்கிறாரா?: கசியும் தகவல்கள்!
ஜெயலலிதா உயர் சிகிச்சை பெற சிங்கப்பூர் செல்கிறாரா?: கசியும் தகவல்கள்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அவர் தற்போது குணமடைந்துவிட்டதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் நாளை காலை வீடு திரும்புவார் என தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உயர் சிகிச்சை பெற சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூஸ் 18 தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா சுகர் மற்றும் கிட்னி சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறியிருந்தது. ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த டுவிட்டை எடுத்துவிட்டனர்.
JJ should take my advice to charter a plane and go to Singapore for medical attention. We may be opponents but wish her long life and health
— Subramanian Swamy (@Swamy39) September 23, 2016
ஜிடிவி ஆங்கில இணையதளமும் ஜெயலலிதா சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட உள்ளார் என்றார் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா விமானத்தில் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற எனது அறிவுரையை ஏற்க வேண்டும். நாம் எதிர்களாக இருக்கலாம் ஆனால் நீங்கள் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என கூறியுள்ளார்.
