தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் 109 டிகிரி வெப்பம்.. அடுத்த 3 நாட்கள் வெயில் வாட்டி எடுக்கும் என எச்சரிக்கை..!
- இன்றும் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- சென்னையில் 105 டிகிரியை தாண்டியது வெயில்.. பொதுமக்கள் கடும் அவதி...!
- புயல் போச்சு.. வெயில் வந்திடுச்சு! 13 இடங்களில் சதமடித்த வெயில்!
- தமிழ்நாட்டில் இன்று 8 நகரங்களில் அதிகபட்ச வெப்பம்.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!
சென்னையை வெயில் வாட்டி வதைக்க என்ன காரணம்? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
சென்னையில் கடந்த இரு நாட்களாக வெயில் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அக்கினி வெயில் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. முக்கியமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மக்கள் பலர் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் தவித்து வருகின்றனர்.
திடீரென சென்னையில் வெப்பம் இவ்வளவு உயர காரணம் என்ன என்பது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்தபோது “வங்க கடலில் உருவான மோக்கா புயல் கரையை கடந்ததால் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை கடல் பகுதிகளில் காற்று வீசுவது குறைந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது. தற்போது சென்னை பகுதியில் மீண்டும் கொஞ்சமாக கடல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. எனினும் இந்த வெப்பநிலை அடுத்த 2 நாட்களுக்கு நீடித்து பின் குறையும்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
