1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (22:35 IST)

தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன்? பாஜக தலைவர் கேள்வி

மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் என  தமிழக அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.                                          
ரஷ்யா- உக்ரைன் இடையே                   இன்று தொடர்ந்து 8 வது நாளாக போர் நடந்து வருகிறது. இந்தியர்களை மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உக்ரையில் அதிகளவில்  உள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில்,  உக்ரைனில் மெற்குப் பகுதியில் உள்ள மாணவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழ் நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.   உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.