தொடர்புடைய செய்திகள்
- சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!
- பீகார் வாக்காளர் நீக்கம் ஜனநாயக படுகொலை! - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
- தென்மாநில உணவுகளுக்கு அவ்வளவு டிமாண்ட்! - பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!
- காலை உணவு திட்டம்.. முதலமைச்சருக்கு உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி கோரிக்கை..!
- இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்டப்போ எங்க போனீங்க ஸ்டாலின்? - பிரசாத் கிஷோர் தாக்கு!
நேற்று வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணி பீகாரில் நடைபெற்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டது குறித்து பிரசாத் கிஷோர் விமர்சித்துள்ளார்.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் நேற்று தோழமை கட்சிகளுடன் வாக்கு திருட்டிற்கு எதிரான பேரணியை நடத்தியது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பீகார் மற்றும் பீகார் மக்களின் பெருமை குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணத்தை அரசியல் வியூகியும், ஜனசுராஜ் கட்சி தலைவருமான பிரசாத் கிஷோர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதும், இழிவுப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. அப்போது ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. அவர் மட்டுமல்ல காங்கிரஸும் பீகாரை இழிவுப்படுத்துபவர்களை முன்னிறுத்துகிறது. கூலி வேலை செய்வது பீகாரிகள் மரபணுவில் உள்ளது என ரேவந்த் ரெட்டி பேசினார். ஆனால் அவரை காங்கிரஸ் கௌரவிக்கிறது” என விமர்சித்துள்ளார்.
Edit by Prasanth.K
