தொடர்புடைய செய்திகள்
- மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்- மாவட்ட ஆட்சியர்
- முதலமைச்சருக்கு கிறிஸ்துவ நூலை தந்த கலெக்டர்: இந்துமத புத்தகத்தை வழங்கி பாஜக பதிலடி
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி
- மீண்டும் அதிகரிக்கும் கொரொனா.... மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
- சென்னை கலெக்டர் மாற்றத்தின் பின்னணி என்ன?
பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணி! – மாவட்ட ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை!
விருதுநகரில் இரவு நேர பணிகளில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகள் நடைபெற உள்ள நிலையில் விருதுநகரில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைய தொடங்கியுள்ளது. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பட்டாசு ஆலைகளில் இரவு நேரங்களிலும் பணி நடப்பதாக தெரிகிறது. இரவு நேரங்களில் தூக்க கலக்கத்தில் சிறிது தவறு நடந்தாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருப்பதால் இரவு நேர பணிகள் கூடாது என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதை மீறி இரவு நேர பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
