1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (08:56 IST)

ஆடு திருடும் கும்பலால் பணியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

ஆடு திருடும் கும்பல் வைரலாக்கிய ஆடியோ காரணமாக எஸ்ஐ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் எஸ்ஐ ஆக பணிபுரிந்து கொண்டிருந்த கங்கை நாதபாண்டியன். இவர் ஆடு திருடும் கும்பலை பிடித்தபோது லஞ்சம் கேட்ட தாகவும் இதுகுறித்து ஆடியோ இணையதளங்களில் வைரலாக தாகவும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் அவரை ஆயுதப்படைக்கு மாற்றியது. ஆனால் தான் லஞ்சம் கேட்கவில்லை என்றும் ஆடு திருடும் கும்பல் தாங்கள் தப்பிப்பதற்காக எடிட் செய்யப்பட்ட ஆடியோவை வெளியிட்டார்கள் என்றும் தன் மீது எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ராஜினாமா செய்வதாக பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது