1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (12:12 IST)

#மே7அழிவின்ஆரம்பம்: அரசை எதிர்த்து டிவிட்டரில் கொதிக்கும் நெட்டிசன்கள்!!

#மே7அழிவின்ஆரம்பம் டாஸ்மாக் திறப்பை எதிர்த்து டிவிட்டரில் கொதிக்கும் நெட்டிசன்கள். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  
 
தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். 
 
மேலும் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #மே7அழிவின்ஆரம்பம் என்ற ஹேச்க்டேக்கை டிரெண்டாக்கி நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.