1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 மே 2026 (12:13 IST)

ஆளுநரிடமிருந்து வந்த அழைப்பு!. இன்று ஆளுநரை சந்திக்கும் விஜய்!..

vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுவரை தவெக தரப்பிலிருந்து இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம், ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதங்களை கொண்டுவருமாறு அளுநர் கூறியிருக்கிறார். இந்நிலையில்தான், இன்று மாலை 3.30 மணிக்கு தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு இல்லை என்றாலும் தனிப்பெரும் கட்சி எனும் அடிப்படையில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரவிருக்கிறார்.

எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதஞ்களை ஆளுநரிடம் வழங்கி ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரவுள்ளார். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கும் பட்சத்தில் நாளை நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.