தொடர்புடைய செய்திகள்
- நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!
- கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: பள்ளி தாளாளர்-முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..!
- திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு
- 6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? திருப்பதி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
- திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலி.. தமிழக முதல்வர் இரங்கல்..!
சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆமைகள்: வன ஆர்வலர்கள் அதிர்ச்சி..!
சென்னை கடற்கரையில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதை பார்த்து, வன ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அருகே உள்ள நெமிலிகுப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் இறந்து கிடந்ததாகவும், அதேபோல் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் 8 ஆமைகள் இறந்து கிடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்று சில ஆமைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொத்துக்கொத்தாக ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கியிருப்பது வன விலங்குகள் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் நீரை குடிநீர் ஆக்கும் பணிகளுக்காக நெமிலிகுப்பம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்புகளினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படும் வலைகளில் ஆமைகள் சிக்கி உயிரிழந்திருக்கலாம். மேலும், ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என கூறியுள்ளார்.
Edited by Siva
