தொடர்புடைய செய்திகள்
- கைவிரல் அளவுள்ள அதிசய குரங்குகள்...ஆச்சர்யத்தில் மக்கள்
- தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான ஆணையத்தை அமைத்தது
- இந்த செமஸ்டருக்கும் தேர்வு ஆன்லைனில்தான்! – உயர்கல்வித்துறை தகவல்!
- ரஜினி கட்சியுடன் திமுக கூட்டணியா? முக ஸ்டாலின் பேட்டி
- எனக்கு பட்டம் குடுத்ததுக்கு தேங்க்ஸ்..! இந்தாங்க உங்களுக்கு ஒன்னு! – எடப்பாடியாரை பங்கம் செய்த ஸ்டாலின்!
நீங்க யோக்கிய சிகாமணிதான்; கொஞ்சம் நாகரீகமா பேசுங்க! – ஸ்டாலினுக்கு டிடிவி கண்டனம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசாவுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக இடையேயான வாக்குவாதங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக முன்னாள் அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து பல இடங்களில் பேசி வரும் ஆ.ராசா நீதிமன்ற தீர்ப்பில் அவரை குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்ட அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “உலகமகா யோக்கிய சிகாமணிகளான மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும்! புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி பேச ஊழலின் ஊற்றுக்கண்களான இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சொத்து குவிப்பு வழக்கை பேசுபொருளாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
