தொடர்புடைய செய்திகள்
- வாய் கூசாமல் வசனம் பேசிய அமைச்சர்கள் எங்கே? விளாசிய டிடிவி!!
- #வெற்றிசின்னம்குக்கர்: அதிரடியை ஆரம்பித்த டிடிவி அண்ட் கோ!!
- ஸ்டாலுனுக்கும் ஈபிஎஸ்-க்கு இது சந்தோசமா இருக்கும், ஆனா எனக்கு... டிடிவி வேதனை!
- நான் சும்மா இருக்க மாட்டேன்... ஸ்டாலினுக்கு டிடிவி வார்னிங்!
- நீங்க யோக்கிய சிகாமணிதான்; கொஞ்சம் நாகரீகமா பேசுங்க! – ஸ்டாலினுக்கு டிடிவி கண்டனம்!
தனியார் கைகளில் மின்வாரியம்? டிடிவி காட்டம்!
மின்வாரிய பணியிடங்களை நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் இது குறித்து மேலும் பதிவிட்டதாவது, தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
முதலமைச்சரும், அவருக்கு நெருக்கமான அந்தத் துறையின் அமைச்சரும் மின்துறை வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு அடுத்தடுத்து இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிக்கு துணை போவது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பன போன்ற சந்தேகங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றன.
மக்களின் அத்தியாவசிய தேவையான மின்விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கூட நேரடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு திறனற்றதாக தமிழக மின்சாரத்துறை மாறிவிட்டதா? மின்வாரியத்தை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்களோ? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
