திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவுக்கும், பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, டெய்சிக்கு மிரட்டல் விடுத்த திருச்சி சூர்யாவை , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்....