1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (17:00 IST)

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Holiday
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் உள்ளூர் பண்டிகை காரணமாக மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கமாக உள்ளது 
 
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு நாளை அதாவது ஜூலை 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பணிநாளாக  கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran