கிலோ ரூ.40 - மார்கெட்டில் தக்காளி விலை மேலும் குறைந்தது!!

வியாழன், 2 ஜூன் 2022 (10:24 IST)
தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்தது.
 
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்தது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்தது. தக்காளி வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120-ல் இருது ரூ.80 வரை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.80 வரை விற்ற நிலையில், இன்று கிலோ ரூ.40க்கு விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என தகவல். 

எல்லாம் காட்டு

மொத்தம் 1,36,939 எம்பிபிஎஸ் சீட்.. கர்நாடகா முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. முழு விவரங்கள்...

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் குழுவில் ரகுராம் ராஜன்: கொள்கைகளை மறுஆய்வு செய்ய புதிய அதிரடி நியமனம்!

சென்னையில் நாளை 8 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியில் ஊழல் தடுப்பு அதிரடி: 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்!

பாஜகவுடன் திமுக கைகோர்க்கலாம்: திருமாவளவனின் பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments