1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (12:32 IST)

ஞாயிற்றுக்கிழமையும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தங்கம் வெள்ளி மற்றும் கச்சா எண்ணெயின் மார்க்கெட் விடுமுறை என்பதால் அன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்பதும், முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் இன்றும் திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூபாய் 106.04 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 102.25 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலை 106 ரூபாயையும் டீசல் விலை 102 ரூபாயையும் தாண்டி உள்ளது ஏழை எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது