1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (17:12 IST)

ஜீலை 24ல் TNPSC 4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். 
 
குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . இந்த தேர்வு வருகிற ஜீலை 24ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200கேள்விகள் கேட்கப்படும். 
 
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.