சசிகலாவின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு: புதிய உத்தரவு!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:16 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களை வழங்க உள்ள நிலையில் இதில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
இதன்படி அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு ரேஷனில் பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும் ஒரு கரும்பின் அதிகபட்ச விலை ரூபாய் 33 ஆக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்றும் கரும்பின் உயரம் ஆறு அடிக்கு குறையாமல் கொள்முதல் செய்யப்படும் என்றும் நோய் தாக்கிய கரும்புகள் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது .
 
 
 

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments