1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய இளைஞர்கள்: ரயில் மோதி துண்டுதுண்டாக சிதறிய கொடூரம்

three dead
இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய இளைஞர்கள்
இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய மூன்று இளைஞர்கள் ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி சம்பவம் செங்கல்பட்டு அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
செங்கல்பட்டு அருகே மோகன், பிரகாஷ் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேர் தண்டவாளத்தில் நின்றபடி மாறிமாறி வீடியோ எடுத்துள்ளனர் 
 
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து கெத்து காட்டுவதாக அவர்களது திட்டமாக இருந்துள்ளது
 
இந்த நிலையில் திடீரென தண்டவாளத்தில் ரயில் வருவது கூட தெரியாமல் வீடியோ எடுத்ததால் 3 பேர்களும் ரயில் மோதிய வேகத்தில் துண்டாக சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர் 
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் இளைஞர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்