1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (17:03 IST)

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்; மூன்று பேர் கைது

தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக தென் தமிழகத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த செய்திகள் பெருகி வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூர், திருப்பதி ஆகிய முக்கிய இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவியதில் போலீஸார் கடும் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக முகமது ஹனிப் கான், முஹமது சையது உள்ளிட்ட மூன்று பேரை தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.