வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (19:30 IST)

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது என்பதும் சமீபத்தில்கூட காங்கிரஸ் கட்சியை நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்ததாக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பெட்ரோல் டீசல் உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்ட செய்யவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் ஜூன் 28 முதல் 30 வரை தமிழ்நாடு முழுவதும் மாபெரும் எதிர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்