தொடர்புடைய செய்திகள்
- 7 குளங்களைக் காணவில்லை- மாவட்ட ஆட்சியரிடம் புகார்
- மல்லிகைப்பூ வாசம்.. சிசிடிவியில் தோன்றிய கருப்பு உருவம்..! – பேய் பீதியில் கிராம மக்கள்!
- இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் தேர்தல்! – மீண்டும் ஆர்.என்.ஜெயபிரகாஷ் தேர்வு!
- ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு!
- ரூ.2,000 நோட்டுகளை பேருந்துகளில் மாற்றலாம்.. காலையில் வெளியான சுற்றறிக்கை வாபஸ்..!
எல்.இ.டி டிவியை திருடிச் செல்லும்போது... சிரித்ததால் சிக்கிய திருடர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே எல்.இ.டி டிவியை திருடிச் சென்றபோது, சாதுர்யமாகச் செயல்பட்ட போலீஸார் திருடர்களை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கற்குழி பகுதியில் , உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சதாம் என்ற நபர் மின்சாதனங்களை வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.
இன்று தன் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல வேண்டி, எல்.இ.டி டிவி ஒன்றை தன் நண்பரின் உதவியுடன் எடுத்துச் செல்லும்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் அவர்களை வழிமறித்து, மிரட்டி, அந்த டிவியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, சதாம் போலீஸில் புகாரளித்தார். சிசிடி காட்சிகளை சோதனை செய்த போலீஸார், ஏரியில் இருந்த திருடர்களைக் கண்டுபிடித்தனர். ஏரியில் இருந்து அவர்கள் தப்பிச் செல்லும்போது, சாதுர்யமாகச் செயல்பட்டு வழிப்பறி செய்தவர்களை கைது செய்து, டிவியை பறிமுதல் செய்தனர்.
அடுத்த கட்டுரையில்
