1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (11:13 IST)

2,000-த்தை தொட்ட ராயபுரம்: மோசமாகும் சென்னையின் நிலை!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல். 
 
நேற்று தமிழகத்தில் 805 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 805 பேர்களில் சென்னையில் மட்டும் 549 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால்  சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சென்னையை பொருத்த வரை சென்னையின் 15 மண்டலங்களில் 5 மண்டலங்கள் 1,000 பாதிப்பை தாண்டியுள்ளது. ஆம், அதிகப்பட்சமாக ராயபுரத்தில் 2,065, கோடம்பாக்கத்தில் 1488, திரு.வி.க.நகரில் 1253, தேனாம்பேட்டையில் 1188, தண்டையார்பேட்டையில் 1188, அண்ணா நகரில் 924, வளசரவாக்கத்தில் 740, அடையாறில் 619 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.