1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (09:38 IST)

முந்திரிக்கு ஆசைப்பட்டு கரடியிடம் கடி வாங்கிய பெரியவர்

திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் முந்திரிப்பழம் சாப்பிட ஆசைப்பட்டு பொதிகை பகுதியில் உள்ள ஒரு முந்திரி கொல்லை பக்கமாக போனபோது அங்கு சுற்றிதிரிந்த ஒரு கரடியிடம் மாட்டிக்கொண்டார். அவரை தாக்கிய கரடி அவரை பல இடங்களில் கடித்து வைத்தது. தேவசகாயத்தின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவரவும் கரடி ஓடிவிட்டது. பின்னர் தேவசகாயத்தை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

முந்திரிக்கு ஆசைப்பட்டு கரடியிடம் தேவசகாயகம் கடி வாங்கியது அப்பகுதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.