1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The nurses continue to struggle for the third day

மூன்றாவது நாளாகவும் தொடரும் செவிலியர்கள் போராட்டம்

karur
கடந்த ஐந்தாம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கள் மீது கூடுதலான பணிச்சுமை சுமத்துவதாக கூறி இதற்கு காரணமான மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
இது தொடர்பாக கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமுகமாக இந்த பிரச்சனையை முடித்து வைத்தார். இருந்தபோதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இதுதொடர்பாக நேற்று முன் தினம் (11-06-19) தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க கரூர் மாவட்டத் தலைவர் கார்த்தி செயலாளர் செல்வராணி பொருளாளர் தனலட்சுமி சங்கத்தின் மாநில துணை தலைவர் நல்லம்மாள் ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா உத்தரவிட்டார். 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவிலியர் சங்கத்தின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா நேற்று முன் தினம் மாலை முதல் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதனைத் தொடர்ந்து இன்றும், செவிலியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
இரண்டாவது நாளாகவும் தொடரும் இந்த ஆர்பாட்டத்தினால் தமிழக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பது இப்பகுதி பொதுமக்களின் கருத்தாகும். நேற்று மதியம் முதல் இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் இந்த ஆர்பாட்டத்தினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு 
 
 
அடுத்த கட்டுரையில்
உங்களால் முடியுமா...? கேரளாவில் டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ஸ்!