தொடர்புடைய செய்திகள்
- குடியுரிமைத் திருத்த சட்டத்தை கிழித்த மாணவி – பட்டமளிப்பு விழாவில் நூதன எதிர்ப்பு !
- குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையா பாக்காதீங்க... தமிழிசை ஆதங்கம்!!
- ஆளுநர் பதவியா எனக்கா? வதந்திகளுக்கு முத்தையா முற்றுப்புள்ளி!
- முதல்வர் மம்தா பானர்ஜி என்னை அவமானப்படுத்துகிறார் : ஆளுநர் ஜக்தீப் தன்கர் வருத்தம்!.
- பகவான் ராமருக்கு உயர்சாதியினரா உதவினர்? – கோவா ஆளுனர் சர்ச்சை கேள்வி!
7 பேர் விடுதலை ...ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை - ராமதாஸ் டுவீட்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலை குறித்து ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநரால் முடிவெடுக்க முடியவில்லை என பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
விடுதலை கோரும் கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுனருக்கு பேரறிவாளன் கடிதம். உச்சநீதிமன்றம் நினைவூட்டுகிறது, பேரறிவாளன் நினைவூட்டுகிறார், பா.ம.க. நினைவூட்டுகிறது. ஆனாலும் ஒன்றரை ஆண்டுகளாக ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை. வாழ்க ஜனநாயகம்! என தெரிவித்துள்ளார்
