1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The Governor could not decide Live Democracy Ramadas twitt

7 பேர் விடுதலை ...ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை - ராமதாஸ் டுவீட்

Governor
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வரும் 7 பேரின்  விடுதலை குறித்து ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநரால் முடிவெடுக்க முடியவில்லை என பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
விடுதலை கோரும் கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுனருக்கு பேரறிவாளன் கடிதம். உச்சநீதிமன்றம் நினைவூட்டுகிறது, பேரறிவாளன் நினைவூட்டுகிறார்,  பா.ம.க. நினைவூட்டுகிறது. ஆனாலும் ஒன்றரை ஆண்டுகளாக ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை. வாழ்க ஜனநாயகம்! என தெரிவித்துள்ளார்
About Writer
sinoj kiyan
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸ்: 'சீனாவில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது'