1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The girl sexual assault

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

சிறுமி
நாமக்கல் அருகே 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
 

 
நாமக்கல் மாவட்டம், கொங்களம்மன் கோவில், அருந்ததியர் தெருவை சேர்ந்த மாது (32). லாரி டிரைவர். இவரது அக்கா பரிமளாவை நாமக்கல் கருங்கல் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கணவனை பிரிந்து தனது தாய் வீட்டிலேயே பரிமளா வசித்து வந்தார். இவருக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
பரிமளாவும் கூலி வேலைக்காக வெளியூர் சென்ற சமயத்தில், அந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் மாது. அதை மறைக்க அந்த 13 வயது திருமணம் செய்து கொண்டார்.
 
இது குறித்து தகவலறிந்த அரியாகவுண்டம்பட்டி விஏஓ  சரவணன் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாதுவை கைது செய்தனர். ஆனால், பாலியல் திருமணத்திற்கு துணை போன சிறுமியின் தாய் பரிமளா தலைமறைவாகிவிட்டார். 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சாந்தன் ஒரிஜினல் சாந்தன் இல்லை: அம்பலமான உண்மை