தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை அளவு.. இன்றும் மழை நீடிக்கும்..!
- 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்: வானிலை எச்சரிக்கை.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னை உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை எச்சரிக்கை..!
- கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தோன்றியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவது எப்போது என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு சற்று முன்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி உள்ளது.
இது அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற உடன் வடமேற்கு திசையில் நடந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு ஆந்திரா ஒடிசா கடற்கரை பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
