1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The bodies of the murdered love couple are cremated

கொலை செய்யப்பட்ட காதல் தம்பதியின் உடல்கள் தகனம்

tuticorn
தூத்துக்குடியில்  வெட்டிக் கொல்லப்பட்ட  காதல் தம்பதியின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் முருகேசன் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மாரிச் செல்வம்(24), கார்த்திகா (20) இருவரும்   நேற்று  வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும்  ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், மாரிச் செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால், கார்த்திகாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர்   இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து  கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் 6 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

இன்று காதல் தம்பதியின்  உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஒரே இடத்தில் இரு வீட்டாரின் முன்னிலையில் மின் மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தாஜ்மஹாலை கட்டியது யார்..? ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!