1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thanjavur got more corona cases

தஞ்சையில் மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா! – 200 ஐ தாண்டிய பாதிப்பு!

Tamilnadu
சமீப காலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது தஞ்சை மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 3 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று வரை 225 ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் அதில் 120 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆரம்பத்துலே இருந்தே ராங்கா போகுது! கண்டம் விட்டு பாயும் ஏவுகணை! – வட கொரியாவால் அமெரிக்கா அதிர்ச்சி!