வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மே 2021 (15:46 IST)

ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி; உயர்கிறதா டாஸ்மாக் மது விலை?

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக 2 வார பொதுமுடக்கம் அமலாகியுள்ள நிலையில் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு ரூ.2,900 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு வார ஊரடங்கு நீட்டிப்பிற்கு பின்னாலும் கொரோனா குறையாத பட்சத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.