1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (08:57 IST)

தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு!

தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் நாளை அனைத்து மாவட்டங்களுக்கும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நாளையுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.