1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 24 மே 2022 (14:17 IST)

4 மாவட்டங்களில் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

Radhakrishnan
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் சென்னையில் பிஏ 4 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மக்கள் கவனக்குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.