1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 10 மே 2021 (10:52 IST)

அடுத்த 3 நாட்களுக்கு இருக்கு கோடையை தணிக்கும் குளுகுளு மழை!!

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
ஆம், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது பின்வருமாறு... வெப்பச்சலணம் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இன்று முதல் 13 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் தமிழக மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.