1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have dry climate

காலையில் பனிமூட்டம், மீத நேரங்களில் வறண்ட வானிலை!

மழை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த  சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும். 

 
வானிலை ஆய்வு மையம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும். சென்னை உள்பட வட தமிழகத்தில் காலையில் மேகமூட்டமும், பனிமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நிலவும். 
 
சென்னையில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும்.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash