1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Records 90% Excess Rainfall This Year

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

மழை
இந்த ஆண்டில் தமிழகத்தின் மழையளவு, வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் இந்நேரம் வரை, தமிழ்நாடு முழுக்க 90% அதிகமான மழை வீசியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வழக்கமாக மே மாத காலப்பகுதியில் 10 செ.மீ மட்டுமே மழை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டில் 19.2 செ.மீ மழை பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது 9.2 செ.மீ கூடுதலாகப் பதிவாகியுள்ளது.
 
சென்னையில் மட்டும் கடந்த காலத்தை ஒப்பிடும் போது, சுமார் 83% அதிகமாக மழை ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை பொருத்தவரை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிக அதிகமான மழை பதிவாகியுள்ளது. அங்கு வழக்கமான 6 செ.மீக்கு பதிலாக, 28 செ.மீ மழை பெய்துள்ளது.
 
மே மாதத்தில் காணப்படும் அக்னி நட்சத்திர காலம் தற்போது நடைபெற்று வருகிறது. வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருந்தாலும், இடைவேளைகளில் மிதமான முதல் கனமழை வரை பரவலாக பெய்து வருகிறது.
 
கோயம்புத்தூர், நீலகிரி போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாகவே கனமழை அடிக்கடி   பெய்துவரும் நிலையில், சென்னை மக்களும் மழையை  அனுபவிக்கின்றனர். வானம் மேகமூட்டத்துடன் இருந்ததாலும், சிறு மழையாலும் நகரவாசிகள் கொஞ்சம் குளிர்ச்சியடைந்துள்ளனர்.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கூகுள் உதவியால் காணாமல போன பெண்ணை கண்டுபிடித்த குடும்பத்தினர்.. ஆச்சரிய தகவல்..!