1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu government issues new order to ration shops

ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு

முக ஸ்டாலின்
தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார்.

சமீபத்தில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  நடைபெறும் ஊழலைத் தடுக்க அரசு  ஒரு புதிய திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் எவ்வளவு பொருள் வருகிறது என்பதையும், மக்களுக்கு விநியோகித்ததுபோல மீதன் உள்ள பொருட்கள்  இருப்பு உள்ளது என்பது குறித்த மொத்த கணக்குகளையும் தகவல் பலகையில் இருக்க வேண்டும் என அரசு கூறியது.

இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அத்தியாவசியப் பொருட்கள் பெறும்  கார்டுதாரர்கள் தவிர வெளி நபர்கள் யாரேனும் ரேசன் கடைக்கு முன் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சிறார்களுக்கான தவணை கோவிட் மருந்து 2 கோடி டோஸ் செலுத்தி சாதனை