1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (16:58 IST)

சிறார்களுக்கான தவணை கோவிட் மருந்து 2 கோடி டோஸ் செலுத்தி சாதனை

நாட்டில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தவணை கோவிட் மருந்து 2 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,920 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,27,80,235 ஆக உயர்ந்துள்ளது.

இ ந் நிலையில், நாட்டில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தவணை கோவிட் மருந்து 2 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல் தெரிவித்துள்ளது.