Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகர் தலைமறைவு?

Updated: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (09:23 IST)
பெண்களை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்  தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். 
 
இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசினார்.
 
எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 
மேலும் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் தலைமறைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

எல்லாம் காட்டு

ஸ்டாலினை மிசா டைம்ல கைது பண்ணாங்க!. மிசாவில் இல்லை!.. துரை வைகோ பேட்டி...

விரைவில் டோல்கேட்டே இல்லாதே இந்தியா!.. நிதின் கட்காரி சொன்ன குட்நியூஸ்!..

லண்டன் நகரில் முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு.. நாளை குலுங்க போகுது சில்வர்ஸ்டன் மைதானம்...

ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்.. புதினுக்கு பரிசாக கொடுத்த மோடி...

முக்கிய அதிகாரி இடமாற்றம்... யார் தப்பு செஞ்சாலும் நடவடிக்கை தான்.. ஏன்னா இது தவெகவின் தூய ஆட்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments