1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sv sekar comment against tvk vijay

பலி கொடுக்கிறார்.. உளறுகிறார்!.. ஒன்னும் தெரியல!.. விஜயை பொளந்த எஸ்.வி.சேகர்!..

sv sekar
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி முழு அரசியல்வாதியாக தற்போது மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. எனவே விரைவில் அந்த கட்சிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதேநேரம் 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிடுமா என்பது தெரியவில்லை..

2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை தவெக தனித்துப் போட்டியிடுகிறது. விஜய் அரசியலுக்கு வந்தாலும் அவர் இன்னமும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை. அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை.. அரசியலை எப்படி நடத்துவது என்ற தெரியவில்லை.. தவெகவுக்கு எந்த கொள்கையும் இல்லை.. திமுக மட்டுமே தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்கிறார். தவெக நிர்வாகிகளுக்கும், அந்த கட்சியின் ஆதவாளர்களுக்கும் அரசியல் பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லை என தொடர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி சேகர் ‘விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை.. சினிமாவில் இருந்து நேராக அரசியலுக்கு வந்து விட்டார்.. எழுதி கொடுத்ததை ஆவேசமாக பேசுகிறார்.. ஒன்றுமே தெரியாமல் திமுக தீய சக்தி என்று எல்லா மேடைகளிலும் உளறிக் கொண்டிருக்கிறார்.. வசனம் பேசுவது சினிமாவில் எடுபடும். மக்களிடம் எடுபடாது. அரசியலை பற்றி அவருக்கு எதுவும் தெரியவில்லை.. அவரை ஆதரிப்பவர்களும், அவர்கள் கட்சியில் இருப்பவர்களும் அவரின் ரசிகர்கள் மட்டுமே.. அவர்கள் யாருமே அரசியல்படுத்தப்படவில்லை.. கரூரில் 41 பேரை பலி கொடுத்தார்.. சமீபத்தில் ஒரு இளைஞன் இறந்து போனான்.. தொடர்ந்து பலி கொடுத்துக் கொண்டே இருக்கிறாரே தவிர வேற எதையும் விஜய் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டம் இருக்கிறது, தவெகவுக்கு என்ன கொள்கை? மக்களுக்கு என்ன நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது? என்கிற எந்த விவரமும் தவெகவினருக்கு தெரியாது. மற்ற கட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் அல்லது ஆதாயத்திற்காக வந்தவர்கள்தான் அவரின் கட்சியில் இருக்கிறார்கள். யாருக்கும் எந்த கொள்கையும் இல்லை’
என்று பேசியிருக்கிறார் எஸ்வி சேகர்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலின் வீட்டில் துரைமுருகன் அழுதுகொண்டே போனார்!.. வேல்முருகன் பகீர்!...