1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Special honor for 15 police

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்

சுதந்திர தினம்
2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
அதன்படி, அமரேஷ் புஜாரி,  முனைவர் அ.அமல்ராஜ், சு.விமலா, ந. நாவுக்கரசன், பா.பிரேம் பிரசாத், வெ.செல்வி, க.சாந்தி, எஸ்.ரவி, க.சாயிலெட்சுமி, ஆ. அமுதா, வே.சந்தானலட்சுமி, சு.சீனிவாசன், மு.கனகசபாபதி, க.ஆடிவேல், ப.ஆனந்தலட்சுமி ஆகியோருக்கு விருதும் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. 
 
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும்  தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
அடுத்த கட்டுரையில்
முடக்கிய ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கு விடுவிப்பு