செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:01 IST)

தென்காசி வழியாக தாம்பரம் சிறப்பு ரயில்? – எந்தெந்த நாட்களில் செயல்படும்?

Train
திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சில காலமாக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை அடுத்த ஜனவரி மாதம் வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


அதன்படி இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் (06004) இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20க்கு தாம்பரம் சென்றடையும். அதுபோல மறுமார்க்கத்தில் தாம்பரம் – நெல்லைக்கு திங்கட் கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40க்கு திருநெல்வேலி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, அம்பை, சேரன்மாதேவி ரயில் நிறுத்தங்கள் வழியாக நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.