1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Soon to hold the legislative elections-Request Dmk and admk

திமுகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுக

திமுகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுக

அதிமுக கோரிக்கை மனு
அரவக்குறிச்சி தொகுதியில் சட்ட மன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக மற்றும் அதிமுக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு புகார் எழுந்தது.
 
இதனால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை மே 23 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. ஆனால், தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என திமுக தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திவருகிறது.
 
இந்த நிலையில், இதே கோரிக்கையை முன்வைத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை மே 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி மற்றும் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
 
 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
குழந்தை வரம் வேண்டிய பெண்களிடம் காமலீலையில் ஈடுபட்ட சாமியார்