1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:21 IST)

பேருந்துகளில் கூட்ட நெரிசல்: காற்றில் பறந்த விதிமுறைகள்!

கூடுதலாக பஸ்களை அரசு இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது. அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
 
அரசு பஸ்களில் 60% பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கவேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது போக்குவரத்து செயல்படுவதாக கூறப்பட்டாலும் கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆம், பேருந்துகளில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. 
 
மேலும், இதுபோல கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் கூடுதலாக பஸ்களை அரசு இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.