1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (12:50 IST)

மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலி!

flood in tirunelveli
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது


 
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நான்கு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.