தொடர்புடைய செய்திகள்
- ராஜ் குந்த்ரா கைது வழக்கு… முன் ஜாமீன் கேட்ட மும்பை நடிகை
- நெல்லை பேருந்து நிலையம் கட்டுமானத்தில் ரூ.100 கோடி முறைகேடா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!
- ஆபாசப்படம் கேட்டு சிறுமிக்கு மிரட்டல்! – சென்னையில் இளைஞர் கைது!
- பகலில் மீன் வியாபாரம், இரவில் கொள்ளை: மாமன், மைத்துனர் கைது!
- ஆபாச படம் பார்ப்பவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் சென்னையில் கைது!
3வது முறையாக கைதான சிவசங்கர் பாபா! சிபிசிஐடி அதிரடி
மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மூன்றாவது முறையாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீண்டும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மாணவிகள் பாலியல் புகாரை அடுத்து சிவசங்கர் பாபா கைதான நிலையில் அந்த பள்ளியில் ஆசிரியர்கள் சிலரும் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
