1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (17:53 IST)

சிவகாசி அருகே ஒரே இடத்தில் 2 வெடிவிபத்து: 14 பேர் பரிதாப பலி..!

Fire
சிவகாசி அருகே ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

சிவகாசி அருகே ரெங்கபாளையம் என்ற பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

ரெங்கபாளையம் மற்றும் கிச்சநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில் நடந்த முடிவு விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகாசி பகுதியில் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெடி விபத்து குறித்து தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran