தொடர்புடைய செய்திகள்
- மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
- செந்தில் பாலாஜி நல்லா இருக்கணும்.. அப்ப தான் நிறைய பேர் உள்ளே போவாங்க.. ஜெயக்குமார்
- இன்றுடன் முடிகிறது நீதிமன்ற காவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?
- நடிகை ஷர்மிலி 48 வயதில் கர்ப்பம்....ரசிகர்கள் வாழ்த்து
- செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை வாதத்தை இருட்டடிப்பு செய்யும் முன்னணி ஊடகங்கள்..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவருக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என நீதிபதி அல்லி கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் இன்னும் வலி இருப்பதாக பதில் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
