தொடர்புடைய செய்திகள்
- 20 + 1 தொகுதிகள் காலி? இடியும் அதிமுக கோட்டை; எடப்பாடிக்கு சோதனை காலம் போல...
- அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன ஒத்த வார்த்தை: குதூகலத்தில் தற்காலிக ஆசியர்கள்
- அரசுப் பள்ளிகளில் இனி எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் !
- இனி பள்ளிகளில் பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் – கலக்கும் பள்ளிக்கல்வித் துறை !
- இனி 'உள்ளேன் ஐயா' இல்லை: தமிழக பள்ளிகளில் தானியங்கி வருகை பதிவு
பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா: செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு
பேருந்து கல்வீச்சு வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்ற தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது துறையை கவனித்து கொள்வது யார்? என்பது குறித்த ஆலோசனை இன்று நடந்தது.
இந்த ஆலோசனையின் முடிவில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இனி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்புடன் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பையும் அவர் கவனித்து கொள்வார்
செங்கோட்டையன் பள்ளிக்கல்வி துறை அமைச்சரான பின்னர் யூனிபார்ம் முதல் பாட திட்டங்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றார். அந்த வகையில் இனி விளையாட்டுத்துறையும் இவரது கையில் இருப்பதால் தமிழக விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகளுக்கு நன்மையாக இருக்கும் என கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
