தொடர்புடைய செய்திகள்
- அரசு பள்ளிகளின் நிலைமை கண்ணீரை வரவழைக்கிறது..! அன்புமணி வேதனை.!
- தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
- மாமனார், மாமியார் இருந்தால் 2 நாட்கள் விடுமுறை!? அசாம் அரசு புதிய அறிவிப்பு!
- விடுமுறையில் குடுத்த வீட்டுப்பாடம்.. மறந்துபோன மாணவனை அடித்து பல்லை உடைத்த ஆசிரியர்!
- 4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அதிர்ச்சி தகவல் அளித்த டாக்டர் ராமதாஸ்..!
விடிய விடிய கொட்டிய மழை.. ஒரே ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!
விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்ததால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
