தொடர்புடைய செய்திகள்
- எந்தெந்த மாவட்டங்களில் இன்று விடுமுறை: விரிவான தகவல்
- சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியின் அறிவிப்பு
- நாளை-நாளை மறுநாள் தேர்வு ஒத்திவைப்பு; 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
- நாளை 9 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை மிதக்குமா?
- விடுமுறையில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்புங்கள்: கலெக்டர் உத்தரவு
விடுமுறை அறிவிப்புக்கு பின் விடைபெற்ற மழை: ரத்தாகுமா விடுமுறை
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. மேலும் இந்த மழை இன்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது
இதனையடுத்து சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் நேற்று இரவே வெளிவந்துவிட்டது. ஆனால் இன்று விடுமுறை என உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவுக்கு பின் மழை குறைய ஆரம்பித்துவிட்டது. இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளை சுத்தமாக மழை இல்லை. அதுமட்டுமின்றி முக்கிய சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீரும் தற்போது வடிந்து விட்டன
இதனால் அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து ஆகி இன்று பள்ளி கல்லூரிகளில் இயங்கும் என்று அறிவிப்பு வருமா? என்ற சந்தேகம் ஒருசிலருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருசில தனியார் கல்லூரிகள் இன்று கல்லூரி இயங்கும் என மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
